தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் அரசு பேருந்து விபத்து: 5 பயணிகள் காயம்

 

Advertisement

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதற்காக, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை குறுகியுள்ளதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து நேற்றிரவு அரசு பேருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, அங்கு சாலை குறுகி இருந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளை இடித்தபடி, அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவரின்மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பக்க பகுதி பலத்த சேதமடைந்தது. இவ்விபத்தில், பேருந்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்கு உள்ளான அரசு பேருந்தை கிரேன் மூலம் அகற்றி, வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அனைத்து பயணிகளையும் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement