தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு பேருந்துகளில் `தமிழ்நாடு’ 2012ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர்: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு பேருந்துகளில் `தமிழ்நாடு’ என்ற வார்த்தை 2012ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு அடிப்படை வசதிகள் துவக்க நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதாக சமீப காலமாக ஒரு சர்ச்சை பரப்பப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்று தற்போது உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் என்று எழுதினால் மிகவும் நீண்டதாக உள்ளது என்று அதிமுக ஆட்சி காலத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இது மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆன நிலையில் ஏதோ புதிய செய்தி போல சிலர் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் பேருந்து பழைய பேருந்தாக உள்ளது என்றார்கள். ஆனால் முதல்வர் புதிய பேருந்துகளை அதிகம் வாங்கி பழைய பேருந்து மாற்றப்பட்டு உள்ளது.

இன்னும் புதிய பேருந்துகள் வர உள்ளது. அதே போல அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் எல்லாம், மீண்டும் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்கள், பல இடங்களில் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இப்படி எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட பிறகு எதை குற்றம் சாட்டுவது என்று தெரியாமல், திடீர் என்று தமிழ்நாடு இல்லை என்று குற்றத்தை கண்டுபிடித்து உள்ளனர். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள்.

எனவே எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. ஒரு ஆட்சியில் ஒன்று நடந்தால், அடுத்த ஆட்சி வந்தவுடன் மாற்றப்பட்டு விடுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் என்பதால்தான் அந்த பெயர் மாற்றப்படாமல் அப்படியே விட்டுவிட்டோம். இன்னொருபுறம் இந்த பெயர் எளிதாக உள்ளது என்று போக்குவரத்து பணியாளர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே அப்படியே பின்பற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related News