தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் நெஞ்சுவலியில் துடிதுடித்த கண்டக்டர்: பயணிகளுடன் மருத்துவமனைக்கே டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றும் உயிரிழந்த பரிதாபம்

கடலூர்: கடலூரில் ஓடும் அரசு பேருந்தில் கண்டக்டர் நெஞ்சுவலியில் துடித்தார். உடனடியாக பஸ்சை மருத்துவமனைக்கு டிரைவர் ஓட்டிச் சென்று சேர்த்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து கரூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். கரூர் மாவட்டம் வெங்கல் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (47) கண்டக்டராக இருந்தார்.
Advertisement

டிரைவர் கோபால் பேருந்தை ஓட்டி சென்றார். கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே சென்றபோது கண்டக்டர் பன்னீர்செல்வத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு தனது இருக்கையிலேயே துடிதுடித்து மயங்கினார். இதை பார்த்த டிரைவர் கோபால், உடனடியாக பேருந்தை பயணிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டி சென்றார். அங்கு பன்னீர்செல்வத்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாற்று டிரைவர் மற்றும் கண்டக்டரை ஏற்பாடு செய்து பயணிகளுடன் பேருந்து மீண்டும் கரூர் புறப்பட்டு சென்றது.

Advertisement

Related News