தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபி அருகே பயங்கரம் அணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வெட்டி படுகொலை: மகன் படுகாயம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை. இந்த அணை சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லையில் மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது. அணையில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்யும் குத்தகை உரிமையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெற்று உள்ளார். அணையில் உள்ள மீன்களை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பிடித்து சென்று விடுவதால், கே.என்.பாளையம் ரைஸ் மில் வீதியை சேர்ந்த சக்திவேல் (55) என்பவரை காவல் பணிக்காக நியமித்து உள்ளனர்.

Advertisement

நேற்றுமுன்தினம் இரவு கே.என்.பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த வேதனாண்டி (எ) அய்யப்பன் (52), மற்றும் அவரது மகன் மாதேஸ் (30), ஆகியோர் பெரும்பள்ளம் அணையில் மீன் பிடிக்க சென்றனர். அங்கு காவல் பணியில் இருந்த சக்திவேல் அய்யப்பனிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது இது குத்தகைக்கு விடப்பட்ட இடம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் சக்திவேலுவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், சக்திவேல் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் மற்றும் கவுதம் ஆகியோரை அங்கு அழைத்து வந்து அய்யப்பன் மற்றும் மாதேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அய்யப்பனையும் அவரது மகன் மாதேசையும் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த அய்யப்பன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாதேஸ் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், தந்தை மற்றும் மகனை வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (51), பெரியசாமி (35), கவுதம் (23), சவுந்திரராஜன் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement