தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூகுள் மேப் மூலம் ஓசூர் நகருக்குள் வந்த கனரக வாகனம்: வழி தெரியாமல் வந்த டேங்கர் லாரியால் மின்கம்பம் சேதம்

ஓசூர்: ஓசூரில் கனரக வாகனம் ஓட்டுநர் வழி தெரியாமல் கூகுள் மேப் மூலம் நகருக்குள் புகுந்து மின் கம்பத்தை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மேம்பாலம் பழுதானதால் கனரக வாகனங்கள் பாலத்தின் மீது செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் கனரக வாகனங்கள் வெளிவட்டச் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. இந்த நிலையில் மேட்டூரில் இருந்து மூன்று சிமெண்ட் கலவை டேங்கர் லாரி, கூகுள் மேப் மூலம் கர்நாடகாவிற்கு சென்றது.

அப்போது ஒரு டேங்கர் லாரி ராயக்கோட்டை சாலை வழியாக நகருக்குள் புகுந்து ஹோட்டலுக்கு செல்ல முயன்றபோது கேபிள் ஒயர் லாரியில் சிக்கி கொண்டது. மின் கம்பத்தையும் ஒயரையும் சேதப் படுத்திய லாரி சிறிது தூரம் சென்று நிறுத்தப்பட்டது. இதனால் மின் கம்பம் சேதமாகி சாய்ந்தது, இது குறித்து லாரி ஓட்டுநர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கூகுள் மேப்பை பார்த்து ஓட்டி வந்ததால் மின் ஒயர் இருந்தது கவனிக்கவில்லை என்று தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த மின் துறை அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தும் மின் கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related News