தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூகுள் மேப் செய்த வேலை....தேவாலய படிக்கட்டில் சிக்கிக் கொண்டது கார்

*மூணாறு சுற்றுலா வந்தவர்கள் சோகம்

மூணாறு : மூணாறில், கூகுள் மேப் உதவியுடன் செல்ல நினைத்து தேவாலய படிக்கட்டில் கார் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 4 பேர், இரு தினங்களுக்கு முன் மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்துள்ளனர்.

இரவு எட்டு மணி அளவில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதையில் பயணிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கூகுள் மேப் உதவியுடன் காரை, டிரைவர் இயக்கியுள்ளார். ஹைரேஞ்ச் மருத்துவமனை வழியாக சென்ற போது, மூணாறு மவுண்ட் கார்மல் தேவாலயத்தின் முன்பு வாகனம் நின்றுள்ளது.

தொடர்ந்து வாகனம் செல்லும் வழி முடிந்து படிக்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளது.இதனைக் கவனிக்காத டிரைவர், தொடர்ந்து காரை இயக்கியுள்ளார். இதனால் தேவாலயத்தின் படிக்கட்டுகள் வழியாக இறங்கிச் சென்ற கார், தேவாலய தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

படிக்கட்டில் சிக்கிக்கொண்டதால், இருபுறமும் காரின் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். அப்பகுதியினர், காரின் ஜன்னல் வழியாக சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் அங்கிருந்து மீட்கப்பட்டது.

Related News