தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் ரூ.840 எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, மீண்டும் சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்துள்ளது.ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்ஜெட் எதிரொலியாக சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதாவது தங்கம் விலை எப்படி ஏறியதோ அதே வேகத்தில் குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வந்தது.
Advertisement

இதற்கிடையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.52,440க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,520க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் நடப்பது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் பணச் செலவையும், சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

 

Advertisement