தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கத்தகடுகள் கடத்தப்பட்ட விவகாரம்; சபரிமலையில் நீதிபதி ஆய்வு: 10 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: தங்கத்தகடுகள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சபரிமலையில் நீதிபதி ஆய்வு நடத்தினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து செம்புத் தகடுகள் என்று கூறி தங்கத் தகடுகள் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துவாரபாலகர் சிலைகளில் இருந்து மட்டும் சுமார் 475 கிராம் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே சபரிமலை கோயிலில் உள்ள தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஆய்வு செய்ய நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் ஒரு குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு நேற்று சபரிமலையில் ஆய்வை தொடங்கியது. நேற்று காலை சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஆய்வு நடத்தப்பட்டது. பதிவேட்டில் உள்ள விவரங்களின்படி பாதுகாப்பு அறையில் பொருட்கள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.

Advertisement

சர்ச்சைக்குள்ளான சென்னைக்கு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட துவாரபாலகர் சிலைகள், கதவு நிலை ஆகியவற்றில் இன்று ஆய்வு நடத்தப்படுகிறது. இதன்பின் நாளை ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தம் 18 பாதுகாப்பு அறைகள் உள்ளன. இந்த அனைத்து அறைகளிலும் ஆய்வு நடத்தி 2 வாரங்களுக்குள் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி கே.டி. சங்கரன் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே சபரிமலை கோயிலில் தங்க இழப்பு தொடர்பான விசாரணையின் போது விஜிலென்ஸ் பிரிவால் சுட்டிக்காட்டப்பட்ட 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிபி தலைவர் பி எஸ் பிரசாந்த் தெரிவித்தார். துணை தேவசம் கமிஷனர் (ஹரிபாத்) பி முராரி பாபு மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

10 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு: சபரிமலையில் தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் மாநில குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உண்ணிகிருஷ்ணன் போத்தி, அவரது உதவியாளர்கள் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement