தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கச் சுரங்கம் இடிந்த விபத்தில் நைஜீரியாவில் 100 பேர் மண்ணில் புதைந்து பலி: 15 தொழிலாளர்கள் சடலம் மீட்பு

 

Advertisement

அபுஜா: நைஜீரியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியா நாட்டின் ஜம்ஃபாரா மாகாணத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்கத் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது.

இங்குள்ள தங்க வயல்களை ஆயுதம் ஏந்திய கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி அடிக்கடி வன்முறைச் சம்பவங்களும், கொடிய விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில், உள்ளூர் மக்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அபாயகரமான முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள கடவுரி சுரங்கப் பகுதியில், நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது, ஏராளமான உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உயிர் தப்பியவர்களும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஜம்ஃபாரா காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Advertisement

Related News