தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கம் இரண்டாவது நாளாக ஜெட் வேகம் பவுன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய வரலாற்று உச்சம்: மீண்டும் ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்தது; வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது

சென்னை: தங்கம் விலை நேற்று 2வது நாளாக ஜெட் வேகத்தில் உயர்ந்து பவுன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை கண்டது. வெள்ளி விலையும் போட்டி போட்டு உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம், வெள்ளி வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதன் பிறகு மாதம் இறுதியில் இருந்து தினம், தினம் விலையேற்றம் என்ற வகையில் வரலாற்று உச்சத்தை கண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.82,320க்கு விற்கப்பட்டது.

Advertisement

21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து 22ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை காலை, மாலை என போட்டி போட்டு உயர்ந்தது. அதாவது, காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.82,880க்கும், மாலையில் தங்கம் விலை மேலும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் 2 முறை உயர்ந்து தங்கம் விலை அதிரடியாக புதிய உச்சத்தை தொட்டது இது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை தான் சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.84,000க்கும் விற்க்கப்பட்டது. அதே போல் நேற்று காலையில் வெள்ளி விலையும் உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.149க்கும், கிலோவுக்கு ஆயிரமும் ரூபாய் அதிகரித்து பார்வெள்ளி ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் போலவே இரண்டாவது நாளாக நேற்று மாலையும் தங்கம் விலை கிடு, கிடுவென உயர்ந்தது.

மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.85,120க்கும் விற்கப்பட்து. இந்த விலை உயர்வு என்பது இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. நேற்று காலை, மாலை என 2 வேளையும் சேர்த்து தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று மாலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.150க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேளையில், தற்போது காலை, மாலை என 2 வேளை உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “அமெரிக்க பெடரல் வங்​கி வட்டி விகிதத்தை குறைத்​துள்ளது. இதனால், வங்​கி​யில் வைப்பு வைத்​திருப்போரின் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. இதுத​விர, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, புவி​சார் அரசி​யல் நிச்​சயமற்ற தன்​மை​கள் ஆகிய​வற்​றால், தங்​கத்​தின் மீது முதலீடு என்பது தொடர்ந்து அதி​கரித்​துள்​ளது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்​து வருகிறது. வரும் நாட்​களில் தங்​கத்​தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்​ளது” என்றனர்.

Advertisement

Related News