தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ஆயுதப்படை காவலரிடம் ரூ.43 லட்சம் மோசடி; நடிகர் சூர்யா வீட்டின் வேலைக்கார பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ஆயுதப்படை காவலரிடம் ரூ.43 லட்சம் ேமாசடி செய்த வழக்கில் நடிகர் சூர்யா வீட்டில் பணியாற்றும் வேலைக்கார பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் பலரிடம் தங்க காசு தருவதாக ரூ.2.50 கோடி வரை பணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை முதல் நிலை காவலர் அந்தோணி ஜார்ஜ் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கடந்த 4 ஆண்டுகளாக அயல் பணியாக நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன்.

Advertisement

தியாகராயர் நகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டில் பணியாற்றும் சுலோச்சனா மற்றும் அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சுலோச்சனா சகோதரி விஜயலட்சுமி மற்றும் பாஸ்கரின் நண்பர் ராஜேஷ் ஆகியோர் தன்னிடம் குறைந்த விலைக்கு தங்க காசுகள் வாங்கி தருவதாக கடந்த ஜனவரி மாதம் கூறினர். அதை நம்பி நான் கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் ரூ.43 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி அவர்கள் தங்க காசுகள் வாங்கி தரவில்லை. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடிகர் சூர்யா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் சுலோச்சனா மற்றும் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர். தாங்கள் நடிகர் சூர்யா வீட்டில் பணியாற்றி வருவதால் பெரிய அளவில் தங்க நகை வியாபாரம் செய்து வருவதாக கூறி பலரிடம் மாதம் ரூ.5.500 பணம் செலுத்தினால் ஒரு கிராம் தங்க நாணயமும், ரூ.6,500 செலுத்தினால் வாரம் ஒரு கிராம் தங்க நாணயம் தருவதாக பணம் வசூலித்துள்ளனர்.

அதன்படி பணம் கட்டிய நபர்களுக்கு, அவர்கள் கொடுத்த பணத்திலேயே முதல் சில வாரங்கள் சொன்னப்படி தங்க நாணயம் கொடுத்துள்ளனர். அதை பணம் கட்டியவர்கள் உண்மை என்று நினைத்து பல லட்சம் வரை பணம் சுலோச்சனா மற்றும் அவரது இரண்டு மகன்களான பாலாஜி, பாஸ்கர் மற்றும் சுலோச்சனா சகோதரி விஜயலட்சுமி, பாஸ்கரின் நண்பர் ராஜேஷ் ஆகியோர் ரூ.2.50 கோடி வரை பணம் வசூலித்துள்ளது தெரியவந்தது. இவர்கள் பணம் கட்டியவர்களிடம் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா பெயரை தவறாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அதை உண்மை என்று நினைத்து நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ஜார்ஜ் வேலைக்கார பெண்ணிடம் வங்கியில் கடன் பெற்று ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். அதில் ரூ.7 லட்சம் வரை அவர் தங்கமாக பெற்றதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.43 லட்சத்திற்கு தங்கம் கேட்ட போது அவர்கள் தரவில்லை. இதனால் அவர் புகார் அளித்தது தெரியவந்தது.மேலும், இந்த தங்க காசு மோசடியில் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், சுலோச்சனா திட்டமிட்டு அவர்கள் பெயரை பயன்படுத்தி தெரிந்தவர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றி வந்தது உறுதியானது. அதை தொடர்ந்து, போலீசார் நடிகர் சூர்யா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சுலோச்சனா மற்றும் அவரது 2 மகன்கள், சகோதரி விஜயலட்சுமி, நண்பர் உட்பட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

சுலோச்சனா கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் மாம்பலம் காவல் நிலையத்தில் தங்க காசு மோசடி தொடர்பாக புகார்கள் அளித்து வருகின்றனர். இதனால் கைது செய்யப்பட்ட சுலோச்சனா மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.நடிகர் சூர்யாவின் பெயரை பயன்படுத்தி பலரிடம் ரூ.2.50 கோடி வரை வேலைக்கார ெபண் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement