தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

30 கிலோ தங்கம் மாயமான விவகாரம் சபரிமலை தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்றவரிடம் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் தொடர்பாக தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று 6 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கினார்.

Advertisement

கோயிலின் மேற்கூரை, பக்க சுவர்கள், கதவு, நிலை, படிகள் மற்றும் கோயிலின் வெளிப்புறம் உள்ள 2 துவாரபாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு கோயில் நிலை, கதவு மற்றும் படிகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளை பழுது பார்ப்பதற்காக உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் தேவசம் போர்டு ஒப்படைத்தது.

சபரிமலையில் இருந்து இவற்றை கொண்டு சென்ற போது இதன் எடை 40 கிலோவுக்கு மேல் இருந்தது. ஆனால் சென்னையில் பழுது பார்த்தபின் திரும்பக் கொண்டு வந்த போது அதன் எடை 4 கிலோவுக்கு மேல் குறைந்தது. கடந்த மாதம் துவாரபாலகர் சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவற்றையும் உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் சென்னைக்கு கொண்டு சென்றார்.

இந்த துவாரபாலகர் சிலையில் இருந்த தகடுகளில் தங்கம் இல்லை என்று இவற்றை பழுது பார்த்த சென்னை நிறுவனம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கம் அனைத்தும் மாயமாகி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் தங்கத் தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் தேவசம் போர்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி தலைமையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே சபரிமலை கோயில் முழுவதும் 24 கேரட் தங்கத்தால் தான் தகடுகள் பதிக்கும் பணிகள் நடத்தப்பட்டது என்று இந்தப் பணிகளை செய்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Related News