தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கக் கடத்தல்.. கேரள ஆளுநர் - முதலமைச்சர் இடையே முற்றும் மோதல்: குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் முடிவு

Advertisement

திருவனந்தபுரம்: மலப்புரம் தங்க கடத்தல் தொடர்பான கருத்து விவகாரத்தில் மோதல் முற்றிய நிலையில் கேரள முதலமைச்சர் மீது குற்றச்சாட்டி குடியரசு தலைவருக்கு அம்மாநில ஆளுநர் அறிக்கை அனுப்ப எடுக்க முடிவு செய்துள்ளார். மலப்புரத்தில் ஹவாலா பணம் மற்றும் தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அண்மையில் செய்தித்தாள் ஒன்றுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டியளித்த இருந்தது சர்ச்சையானது.

இது மலப்புர மக்களை இழிவுப்படுத்தும் பேச்சு என கூறி அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனிடையே முதலமைச்சர் கருத்து தொடர்பாக இன்று மாலை நேரில் விளக்கம் அளிக்கும்படி தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு ஆளுநர் ஆரீஃப் கான் உத்தரவிட்டு இருந்தார். இதற்கு ஆட்செபனை தெரிவித்து இருக்கும் பினராயி விஜயன் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யை வரவழைத்து விளக்கம் கேட்க ஆளுநருக்கு அரசியல் சாசனப்படி எந்த உரிமையும் இல்லை என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அதே வேளையில் முதலமைச்சர் முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால் தான் தலைமை செயலர் மற்றும் டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Related News