தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாராவுக்கு ஓராண்டுக்கு ஜாமீன் இல்லை: சிறப்பு விசாரணை ஆணையம் உத்தரவு

பெங்களூரு: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யாராவ், ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் ஐபிஎஸ் அதிகாரியான அவரது தந்தை ராமச்சந்திர ராவ் பெயரை பயன்படுத்தியதுடன் அவருக்கு வழங்கப்படும் சலுகைகளையும் ரன்யாராவ் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

அவரது கூட்டாளிகளான தருண், சாஹில் ஆகியோரும் கைதாகினர். அவர்கள் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி நடிகை ரன்யாராவ் உள்பட குற்றவாளிகள் மூன்று பேரும் ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குனரக ஆணையத்தில் மனுதாக்கல் செய்தனர், அதை விசாரணை நடத்திய ஆணையம், குற்றவாளிகள் மீது காபிபோசா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை ஓராண்டு காலம் ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்ற விதிமுறை உள்ளதால், ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.