தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வதந்தியால் வெடித்த வன்முறை; கோத்ராவில் போலீஸ் செக்போஸ்ட் சூறை: 17 பேர் கைது பலத்த பாதுகாப்பு

கோத்ரா: சமூக ஊடகத்தில் பரவிய வதந்தியைத் தொடர்ந்து, கோத்ராவில் காவல் சாவடியைச் சூறையாடிய கும்பலைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தின் கோத்ரா நகரில், மத ரீதியான பதாகை தொடர்பாக சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவரைக் காவல்துறை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்தியைத் தொடர்ந்து, காவல் நிலையம் முன்பு திரண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அவர்கள் காவல் நிலையும் உள்ள சோதனை சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

Advertisement

நிலைமையைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தடியடி நடத்தியது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 88 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகைக் காலத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கோத்ரா நகரம் ஏற்கெனவே மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட வரலாறு கொண்டது. சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Related News