தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோதையாரில் உலாவும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 ஆகிய அணைகள் உள்ளது. இந்த அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளை சுற்றிலும் அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இவற்றில் பால் வெட்டுதல், அதனை சார்ந்த தொழில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கோதையார், குற்றியார், சிற்றார் போன்ற பகுதிகளில் உள்ளது. இவை தவிர கோதையாரில் 2 நீர் மின் நிலையங்கள், மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு, அரசு பள்ளி போன்றவை உள்ளது. மலைகளின் உள் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளது. அதோடு சூழியல் சுற்றுலா தலமாகவும் உள்ளது.ஆகவே இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கோதையாறு உள்ளது. இதே போன்று யானைகளின் சொர்க்கப்புரியாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இது பல்லுயிரின சரணாலயமாக இருந்தாலும் யானைகள் அதிகமாக உள்ளது.

அரசு ரப்பர் கழகத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர் ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு புதிய ரப்பர் செடிகள் நடவு செய்யும் போது ஊடுபயிர் செய்ய குத்தகைக்கு விடப்படுகிறது. ஊடு பயிராக அன்னாசி, வாழை, மரச்சீனி போன்றவை பயிரிடப்படுகிறது. அடர்ந்த காடுகளில் சுற்றி திரியும் யானைகளுக்கு இங்குள்ள ஊடுபயிர்களை விரும்பி உண்ணுகின்றன.இதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகவும், ஒன்றையாவும் அடர்ந்த காடுகளில் இருந்து வெளியேறி இந்தப் பகுதிகளை சுற்றி வருகிறது. இந்த யானைகளால் பால் வெட்டும் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை சுற்றி வரும் இந்த யானை கூட்டங்கள் பயிர்களை மட்டுமின்றி வீடுகளையும் சேதப்படுத்துகிறது.

யானை நடமாட்டம் இருக்கும் போது பல நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் உள்ளது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒற்றை யானை ஒன்று கோதையார் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் சுற்றி திரிகிறது. இந்த யானை நடமாட்டம் பொதுமக்கள், தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Related News