தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒடுகத்தூரில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்தது: ரூ11 லட்சத்திற்கு வர்த்தகம்

Advertisement

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ரூ.11 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்ேதாறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனை செய்யவும், வாங்கிச்செல்லவும் வருகின்றனர். இதனால் வாரந்தோறும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது திருவிழாவையொட்டி ஆடுகள் விற்பனை மேலும் உயரும். அதே நேரத்தில் புரட்டாசி மாதத்தில் ஆடுகள் விற்பனை குறையும். இந்த நிலையில் இன்று அதிகாலை வாரச்சந்தை கூடியது. அப்போது கடுமையான மூடுபனி காணப்பட்டது.

அருகே இருப்பவர்கள் கூட தெரியாத வகையில் பனிமூட்டம் காணப்பட்டது. ஆனாலும், இன்று நடந்த சந்தையில் ஆடுகளின் வரத்து சற்று அதிகரித்தே இருந்தது. இன்று நடந்த சந்தையில் செம்மறி ஆடுகளும் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பனியை பொருட்படுத்தாமல் விற்பனை சூடு பிடித்தது. ஆடுகளை வளர்க்க போட்டிபோட்டு வாங்கினர். இதனால் ஆடுகளின் விலையும் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதன்படி ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்பட்டது. காலை நிலவரப்படி ரூ.11 லட்சம் வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement