தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை ஆடி மாதம் பிறப்பதையொட்டி திருப்புவனம் சந்தையில் ஆடு விற்பனை அமோகம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடிமாதம் பிறப்பதையொட்டி ஆடு விற்பனை களைகட்டியது. திருப்புவனம் சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை கால் நடைசந்தை நடைபெறும். திருப்புவனம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, மாடு, கோழிகளை விற்பனை செய்வது வழக்கம் நாளை ஆடிமாதம் பிறப்பதை ஒட்டி இன்று அதிகாலை முதலே கால்நடை சந்தை களைகட்டியது.
Advertisement

கடந்த வாரம் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிலோ ஆடு தற்போது ரூ.15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இறைச்சிகாக விற்பனை செய்யப்படும் ஆடுகள் தவிர்த்து சண்டைகளுக்காக வளர்க்கப்படும் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது. கோழிகளின் விளையும் ரூ.300 முதல் ரூ.400வரை விற்கப்பட்டன. 6 கிலோ எடையுள்ள கின்னிக்கோழிகள் ஜோடி ரூ.1500க்கும் 8 கிலோ எடையுள்ள வாத்துகள் ஒரு ஜோடி ரூ.2400க்கும் விற்பனை செய்யப்பட்டன. சண்டை சேவல் ரூ.3000வரை விற்பனையானது. ஆடுகளை ஏற்றி செல்வதற்காக 4 வழி சாலையின் இருபுறமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் நிறுத்தபட்டிருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

 

Advertisement