தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜூன் 7ம் தேதிக்கு பின் உலகளாவிய அழிவு ஏற்படும்: பிரபல தீர்க்கதரிசி கணிப்பு

டோக்கியோ: ஜூன் 7ம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா (வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா), 1911ல் பிறந்து, 12 வயதில் பார்வையை இழந்தார். உலகளவில் தனது துல்லியமான முன்கணிப்புகளால் புகழ்பெற்றவர்.

அவரது முன்கணிப்புகளில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல், 2004 சுனாமி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஆகியவை உண்மையாகியவை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்தாண்டில் பாபா வெங்கா கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ல் நடந்த 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது அவரது கணிப்பில் உண்மையானது.

மேலும், அவர் 2025ல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, மூன்றாம் உலகப் போர், சிரியாவின் வீழ்ச்சியால் உலகளவில் மோதல்கள் தொடங்கும் எனவும் கணித்திருந்தார். இந்நிலையில் பாபா வெங்காவின் முன்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதாவது ஜூன் 7ம் தேதிக்கு பின்னர் (நாளை), உலகளாவிய அழிவு ஏற்படும் என்ற கணிப்பு, உலகளவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது முன்கணிப்புபடி வரும் ஜூலையில் ஜப்பான், தைவான், இந்தோனேசியாவை பாதிக்கும் வகையில் மிகப்பெரிய சுனாமி குறித்த ஜப்பானிய முன்கணிப்பாளர் ரியோ தட்சுகியின் கணிப்புடன் ஒத்துப் போகிறது. புவியியல் அல்லது பொருளாதார அழிவை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களது கணிப்புகளுக்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.