தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் காதலனின் முகத்தை சிதைத்த காதலி: கூலிப்படையை ஏவி வெறிச்செயல்

Advertisement

புதுடெல்லி: வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் ஆத்திரம் அடைந்து கூலிப்படையை ஏவி காதலனின் முகத்தை சிதைத்த காதலி கைது செய்யப்பட்டார். டெல்லி நிஹால் விஹார் பகுதியை சேர்ந்தவர் ஓம்கார். வயது 24. கிராபிக் டிசைனர். இவருக்கும் 30 வயது பெண் டிசைனருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி தனது காதலன் ஓம்காரை பழிவாங்க துடித்தார். இதன் அடிப்படையில் ₹30 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை சேர்ந்த 5 பேரை ஏற்பாடு செய்தார்.

அவர்களிடம் ஓம்கார் முகத்தில் ஆசிட் வீசி சிதைக்க வேண்டும் என்று கூறி 3 ஆசிட் பாட்டில்களை பெண் டிசைனர் வழங்கினார். கடந்த 19ம் தேதி ேவலை முடிந்து ஓம்கார் வீடு திரும்பும்போது பைக்கில் வந்த 3 பேர் அவர் மீது ஆசிட் வீச முயன்றனர். அது முடியாததால், ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதையடுத்து சிசிடிவி கேமரா, ஓம்கார் செல்போன் அழைப்பு விவரங்கள் அடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த விகாஷ், பாலி, ஹர்ஷ், ரோகன் ஆகியோர் 23ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்த போது ஓம்காரின் காதலிதான் இதை ஏற்பாடு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து பெண் கிராபிக் டிசைனரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ததால் அவனது முகத்தை ஆசிட் வீசி சிதைக்க விரும்பினேன். ஆனால் ஆசிட் வீச முடியாததால் கத்தியால் பலமுறை குத்தி சிதைக்க சொன்னேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Advertisement