தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

10 வயது சிறுமிக்கு வாயில் மது ஊற்றி பாலியல் கொடுமை: தாய், கள்ளக்காதலன் கைது

Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வடக்கு நரசிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், கடந்த 10 ஆண்டுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 27 வயதான அப்பெண்ணுக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். அந்த பெண், திருமணத்திற்கு முன்பே, ஆத்தூர் புங்கவாடி வடக்கு செங்காடு பகுதியை சேர்ந்த முத்து (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், மீண்டும் பழைய காதலனை சந்தித்த அப்பெண், கடந்த பிப்ரவரி மாதம், இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருடன் ஓட்டம் பிடித்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி ஆத்தூர் உழவர்சந்தை பகுதியில், தனது பிள்ளைகள் இருவரையும், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அழைத்துச் சென்றதை பார்த்த தொழிலாளி, பின்தொடர்ந்து சென்றார். பிறகு அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றதும், தனது பிள்ளைகளை பார்த்து, பெற்ற தந்தையான என்னுடன் வராமல் இருந்து விட்டீர்களே என கேட்டுள்ளார். அப்போது, அவரது மகள் கூறுகையில், ‘எனது தாயும், அவரது காதலன் முத்துவும் ஒன்றாக மது குடித்து விட்டு, எனக்கும் வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றி பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். முத்து நிர்வாணமாக வீட்டில் சுற்றித்திரிந்து, எனக்கு கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுக்கிறார். அதனை பார்த்தும், இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா எனக்கூறி, தாய் கண்டுகொள்வதில்லை.

என்னை எப்படியாவது உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,’ எனக்கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார், தாய் மற்றும் காதலன் முத்து மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement