தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் இச்சைக்காக சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் ‘போக்சோ’: குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

நாக்பூர்: பாலியல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பண ஆசை காட்டியதுடன், அச்சிறுமியின் கையைப் பிடித்து அத்துமீறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அந்த இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிவேதிதா பி. மேத்தா, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். அப்போது, ‘பாலியல் இச்சைக்கு அழைப்பு விடுத்து பண ஆசை காட்டுவதும், அதற்காகச் சிறுமியின் கையைப் பிடித்து இழுப்பதும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்ற வரம்பிற்குள் வரும்’ என்று நீதிபதி விளக்கமளித்தார். வெறும் உடல் ரீதியான தீண்டலைத் தாண்டி, குற்றவாளியின் உள்நோக்கமே முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது. மேலும், குற்றத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு நன்னடத்தை விதிகளின் கீழ் சலுகை வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Advertisement