தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் குழந்தைகளை பெற்றதால் நடந்த கொடுமை; பாஜக எம்பியின் சகோதரி மீது தாக்குதல்

காஸ்கஞ்ச்: உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் முகேஷ் ராஜ்புத்தின் சகோதரி ரீனா ராஜ்புத் என்பவருக்கும், காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணமாகி சில காலங்களிலேயே மாமனார் மற்றும் கொழுந்தனாரால் ரீனா ராஜ்புத் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

Advertisement

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றதால், இவருக்குக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த குடும்பப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்து வந்த நிலையில், தற்போது விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ரீனா ராஜ்புத் குளித்துக்கொண்டிருந்தபோது, அவரது மாமனாரும், கொழுந்தனாரும் அதனை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அவரை நடுரோட்டிற்கு இழுத்துவந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

மாமனார் கட்டையாலும், கொழுந்தனார் இரும்புக் கம்பியாலும் தாக்கியதில் ரீனா ராஜ்புத் பலத்த காயமடைந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரீனா ராஜ்புத் அளித்த புகாரின் பேரில், மாமனார், கொழுந்தனார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement