தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிரிவலம் முடிந்து சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல்

திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வலக்கம். அதன்படி ஆவணி மாதம் பௌர்ணமியானது இன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கியுள்ளது.

Advertisement

தொடர்ந்து நாளை அதிகாலை 12.30 மணி வரை கிரிவலம் வரலாம் என திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதலே பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். அவ்வாறு நேற்று இரவு முழுவதும் கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதல் கத்திருந்தனர். குறிப்பாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் நடைமேடைமுழுவதும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வந்தடைந்தவுடன் ரயில் ஏறுவதற்காக காத்திருந்த மக்கள் ஒவ்வொருவரும் முண்டியடித்து செல்ல்கின்றனர். இதனால் ரயில் இருந்து இறங்க கூடிய மக்களும் இறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தில் இந்த சூழல் நிலவுவதால் கூடுதல் சிறப்பு ரயில்களை ஒன்றிய அரசு இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

Advertisement

Related News