தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது: பொதுமக்கள் நிம்மதி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வேலக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டியபடி பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. குறிப்பாக சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்லும் பொதுமக்களை முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்று வருகின்றன.
Advertisement

இந்நிலையில் காட்டுக்கூடலூர் கிராமத்தில் அவ்வப்போது கிராம மக்களை மிரட்டி வந்த சுமார் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை நேற்று கரையில் படுத்திருந்தது. அப்போது அந்த பக்கமாக சென்ற சிறுமி ஒருவர், இதை பார்த்து கூச்சலிட்டார்.

உடனடியாக அங்கு திரண்ட கிராம மக்கள், கரையில் படுத்திருந்த முதலையை பிடித்தனர். பின்னர் முதலையின் கால்கள் மற்றும் வாயை கட்டி தோளில் தூக்கி சென்று, பின்னர் மினிவேன் மூலம் கொண்டு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நீண்ட காலமாக பொதுமக்களை கொன்றும், மிரட்டியும் வந்த முதலையை பிடித்த சந்தோஷத்தில் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட முதலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் விடப்பட்டது.

 

Advertisement

Related News