தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கெங்கவல்லி: கெங்கவல்லியில் மாரியம்மன் கோயிலில் மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி கணவாய்க்காடு, கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்ரீ மாரியம்மன், கணபதி, சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர் கோயில் பூசாரியாக உள்ளார்.

Advertisement

நேற்று இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல சிங்காரம், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை முன்னாள் ராணுவ வீரர் மாணிக்கம் என்பவர் தனது விவசாய தோட்டத்திற்கு செல்லும் போது, மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட சென்றுள்ளார்.அங்கு கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கோயில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கோயிலில் குவிந்தனர். கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக கெங்கவல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கோயிலின் உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement