தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொது சிவில் சட்டத்தின் கீழ் லிவ் இன் உறவுகள் பதிவு விதியில் முக்கிய திருத்தம்: உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்

நைனிடால்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கடந்த ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவுகளில் இருக்கும் தம்பதிகள் உள்ளூர் காவல் துறையிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், தவறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், லிவ் இன் உறவுகளை பதிவு செய்வதில் பல்வேறு முக்கிய திருத்தங்கள் செய்யப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், லிவ் இன் உறவுகளை பதிவு செய்ய முடியாத நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தம்பதியரில் ஒருவர் மைனர் என்றாலோ, தடை செய்யப்பட்ட உறவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ, ஒருவர் அல்லது இருவரும் ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலோ அல்லது மற்றொரு குடும்ப உறவில் இருந்தாலோ பதிவு செய்ய முடியாது. ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் 30 நாளில் இருந்து 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News