தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாலினம் அறிய கர்ப்பிணிகளை வரவழைத்த இடைத்தரகர்கள் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஷேர்ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் வந்தனர். நீண்டநேரமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தவர்களிடம் கிராம மக்கள் விசாரித்தனர். அதற்கு அவர்கள், ` கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தை குறித்து ஸ்கேன் செய்யும் இடத்தை தேடிவந்தோம்’ என தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவலின்படி எஸ்பி சியாமளாதேவி, மாவட்ட சுகாதார இணைஇயக்குனர், மாவட்ட சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் வந்து கர்ப்பிணிகளிடமும் விசாரித்தனர். இடைத்தரகர்களாக செயல்பட்டதாக திருப்பத்தூர் அடுத்த ராட்சமங்கலம் ேஜாதி (37), இவரது கணவர் சிவசக்தி (40), கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கோவிந்தன் (47), ரஞ்சிதம் (39), அமலா (40) ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்ய ரூ.15 ஆயிரம் முன்பணம் வாங்கியதும் தெரியவந்தது.

Related News