தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.டி.நாயுடு பாலத்தில் நாயுடு என்பது ஜாதியின் அடையாளமாக தனித்து பார்க்கவேண்டியதில்லை: கவிஞர் வைரமுத்து!

சென்னை: ஜி.டி.நாயுடு பாலத்தில் நாயுடு என்பது ஜாதியின் அடையாளமாக தனித்து பார்க்கவேண்டியதில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

Advertisement

கடந்தகாலத்தில்

பெருமைக்குரிய பெரியவர்களின்

பெயர்களோடு ஒட்டியிருக்கும்

பின்னொட்டு

சாதிப்பெயர்கள் என்று

கருதப்படக் கூடாது

அவை

அந்தந்தக்காலப் புழக்கங்கள்

அடையாளங்கள் மற்றும்

ஆகுபெயர்கள்

ஜி.டி.நாயுடுவை

நாயுடு என்றே அழைக்கலாம்

உ.வே.சாமிநாதய்யரை

அய்யர் என்றே விளிக்கலாம்

வ.உ.சிதம்பரம்பிள்ளையைப்

பிள்ளை என்றே வழங்கலாம்

இவற்றுள் எதுவும்

அவர்களின் சாதி அபிமானத்தின்

சாட்சி அல்ல

அதைச் சாதிக்கு மட்டுமான

பெருமிதமாகக் கருதுவதுதான்

சமூகப் பிழை

அப்படித்தான்

பசும்பொன்

முத்துராமலிங்கத் தேவர்

என்ற பட்டப் பெயரும்

இவை யாவும்

அவரவர் காலத்துக் குறியீடுகளே

அவற்றை அழிப்பதற்கு

நமக்கென்ன உரிமை?

நானோ என் மகன்களோ

சாதிப்பெயர்களை

இட்டுக்கொள்ள மாட்டோம்

என் பாட்டன்களோ

என் தந்தையோ

இட்டுக்கொண்டதை

நாங்கள் எப்படித் தடுக்க முடியும்

அல்லது அழிக்க முடியும்

சாதிக்கு முன்

சாதிக்குப் பின் என்று

இரண்டு காலங்கள் உண்டென்று

வரலாறு வகிர்ந்து சொல்லட்டும்

ஆதலால்,

ஓங்கிச் சொல்லலாம்

தேவர் திருமகன் வாழ்க;

தேவர் திருப்பெயர் வாழ்க;

தேவர் தியாகங்கள் வாழ்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News