தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம்.. 21,000 குழந்தைகள் இயல்பான திறனை இழந்துள்ளன: ஐ.நா. வேதனை!!

காசா: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பல இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.நா. அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போரின் காரணமாக 40,500 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சரிபாதி குழந்தைகள் கேட்கும், பேசும், பார்க்கும் திறன் உள்ளிட்ட திறன்களை இழந்துள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

ஊட்டச்சத்து காரணமாக காசா குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேநிலை நீடித்தால் 2026 ஜூன் மாதவாக்கில், சுமார் 1,32,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், ஒருங்கிணைத்த உணவு பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 63,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,61,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டின் காசாவின் முக்கிய சாலையின் படத்துடன் தற்போதைய பேரழிவுக்குள்ளான அதே சாலையின் விடியோவை பத்திரிகையாளர் மோதாஜ் அஜாய்ஜியா வெளியிட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. காசாவை சேர்ந்த மோதாஜ் அஜாய்ஜியா முக்கியமான புகைப்பட பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். இவர் காசாவின் முக்கியமான சாலையில் இருபுறமும் உயர்ந்த கட்டடங்களுடன் கூடிய வீடியோவை கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி எடுத்துள்ளார். அதே சாலை இஸ்ரேல் தாக்குதலில் பேரழிவுக்குள்ளாகி உள்ள வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Related News