தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காசாவில் இருந்து 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் அரசு தகவல்

டெல் அவிவ்: காசாவில் இருந்து 3 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் காசா போர் நீடித்து வருகிறது. இதனிடையே ஹமாஸ் பிடியிலுள்ள பணய கைதிகளை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டு வருகிறது. மேலும் காசா முனையில் இருந்து இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்று இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வௌியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற ஷே லெவின்சன்(19), யோனாடன் சமரானோ(21) மற்றும் ஆப்ரா கெய்டர்(70) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு வரப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.