தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காசா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: ஒரு பக்கம் தாக்குதல் மறுபக்கம் பசியால் தவிக்கும் மக்கள்

காசா: இஸ்ரேலில் தொடர் தாக்குதலால் காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலைமை பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளது. ஒரு வேலை உணவுக்கான சிறுவர்களும், பெண்களும் அலை மோதும் அவலம் தொடர்கிறது. இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திவரும் தாக்குதல்கள் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக தொடர்கிறது.இதுவரை 50,000க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதல்கள் விடாமல் தொடர்கிறது இஸ்ரேல்.

உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும் காசாவில் சில நாட்களுக்கு முன் நிவாரண பொருட்களை வாங்க சென்ற பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய கண்முடி தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 875ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. இஸ்ரேல் படை தாக்குதலுக்கு அஞ்சி பாலஸ்தீன மக்கள் குடும்பம் குடும்பம்மாக இடம் பெயர்ந்து வருவதால் காசா முழுவதும் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஜபாலியாவில் உள்ள நிவாரண முகாமில் ஒரு குவளை அரிசிக்கஞ்சியை பெற பெண்களும், சிறார்களும், இளைஞர்கள் மணிக்கணக்கில் போராடும் காணொளி காண்போரின் கண்களை குளமாக்குகிறது. போதிய உணவு இல்லாததால் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக பச்சிளம் குழந்தைகளின் உடல் நலம் மிக மோசமடைந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏராளமான குழந்தைகள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

இதனிடையே தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் ஏராளமா ராணுவ கவச வாகனங்களை காசா எல்லையில் குவித்து வந்ததால் பதற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளது.ஒரு பக்கம் அமைதி பேச்சுகளுக்கு தயார் என கூறிவரும் இஸ்ரேல், மறுபக்கம் காசா மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் பாலஸ்தீன மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் காசா வில் ஒரு சமூகமே உணவின்றி அழிவை நோக்கி செல்வதை தடுக்க வழிதெரியாமல் தவிக்கின்றனர் சர்வதேச பொதுநல அமைப்புகள்.