தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை

Advertisement

*மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கயத்தாறு : கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் அபுதாபியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (40). இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வில்லிசேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சுந்தரி மற்றும் அவரது குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க மரக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் உள் அறையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுந்தரி இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வில்லிசேரி கிராமத்தில் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement