தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கவின் ஆணவகொலை கைதான எஸ்ஐ, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (27) காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி ஹேமா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரவணன், சுர்ஜித் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி ஹேமா, விசாரணையை வருகிற 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த பின்னர், சிபிசிஐடி காவலில் ஒப்படைப்பது தொடர்பாக நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணைக்குப்பின் சுர்ஜித், சரவணன் ஆகியோர் மீண்டும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.