தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரில் 70 கிலோ கஞ்சா கடத்தல்; 2 சென்னை வாலிபர்கள் கைது

திருப்பதி: காரில் கடத்திய 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சென்னையைச் சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டப்ரோலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement

அப்போது அவ்வழியாக காரை ஓட்டி வந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக காரை மடக்கினர். அதில் நடத்திய சோதனையில், 70 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் சென்னை அண்ணா சாலையை சேர்ந்த பிபிநாத்(38), புளியந்தோப்பை சேர்ந்த ரோகன்(36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கார், 70 கிலோ கஞ்சா, 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான இருவர் மீதும் சென்னையில் கஞ்சா கடத்தல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News