தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

Advertisement

கோவை: கோவையில் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கோவை ரத்தினபுரி விஸ்வநாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (48). வக்கீல். இவரை நேற்று மதியம் 4 பேர் அவரது காரில் அழைத்து சென்றனர். செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி 4 பேரும் வக்கீல் உதயகுமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயகுமாரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி உயிருக்கு போராடினார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் உதயகுமாரின் மர்ம உறுப்பை அரிவாளால் அறுத்தும், சிதைத்தும் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர், அவரை காரில் இருந்து தூக்கி வீசி விட்டு தப்பி சென்றனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், படுகொலை செய்யப்பட்ட வக்கீல் உதயகுமார் விஸ்வநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், இவரது மனைவி நித்தியவள்ளி. கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இந்த கொலை நடந்தது என விசாரித்டுஹ் வருகின்றனர். விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உதயகுமாரை காரில் 4 பேரும் அழைத்து சென்று பெண் விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த கும்பலுக்கு எதிராக உதயகுமார் பேசியதாக தெரிகிறது. அவரது ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்து உள்ளதால் அவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

Advertisement