தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தி ஜெயந்திக்கு முன் நடந்த அராஜகம்; லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு: ஒன்றிய அரசு கடும் கண்டனம்

லண்டன்: கடந்த 2020ம் ஆண்டு, இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்த காந்தி சிலை அவமதிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மார்ச் மாதம், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய மண்ணில் செயல்படும் இதுபோன்ற தீவிரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், லண்டனில் உள்ள அவரது சிலை மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழகம் அருகே உள்ள அமைதிப் பூங்கா எனப்படும் டேவிஸ்டாக் சதுக்கத்தில், தியான நிலையில் அமர்ந்திருக்கும் காந்தியின் வெண்கலச் சிலை அமைந்துள்ளது.

Advertisement

கடந்த 1968ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலையின் பீடத்தில், மர்ம நபர்கள் நேற்று சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதி அவமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து லண்டன் பெருநகரக் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த அவமதிப்புச் செயலுக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்தியா முறைப்படி புகார் அளித்துள்ளதுடன், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை உடனடியாகச் சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Related News