தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை குப்பை தொட்டியில் கிடக்கும் ‘ஹைமாஸ்’ லைட்

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Advertisement

கந்தர்வகோட்டை : கந்தர்வக்கோட்டையில் கஜா புயலில் சேதமான ஹைமாஸ் லைட் சீரமைக்கப்படாமல் குப்பையில் போடப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் மற்றும் அரசு மருந்துவமனை அருகில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.

மருந்துவமனை அருகில் அமைக்கபட்டி ஹைமாஸ் லைட்டால் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்தி சிலை பகுதிகளில் இரவில் வெளிச்சம் இருந்து வந்தது. இதனால், நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து எந்த சிரமமும் இல்லாமல் சென்று வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலில் மருந்துவமனை அருகில் இருந்த உயர் மின் கோபுர விளக்கு கிழே சாய்ந்து விட்டது.

இதனை, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பராமரிக்க நடவடிக்கை எடுக்காமல் குப்பை மேட்டில் போட்டுள்ளனர். கந்தர்வகோட்டையின் பிரதான பகுதியாக இருக்கும் இடம் போக்குவரத்துக்கு போதிய வெளிச்சம் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகையால், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News