தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பு சோதனை: வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: ககன்யான் திட்டம் என்பது மனிதர்களை விண்வௌிக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் விண்வௌி பயணத்தின்போது விண்வௌி வீரர்களுடைய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்பாட்டு திறனை சோதனை செய்ய நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

Advertisement

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், “ககன்யான் விண்வௌி பயணத்துக்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது. விண்வௌியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக தரையிறங்க பாராசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று(நேற்று) நடந்த சோதனையில் பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த சோதனையை செயல்படுத்தின” என்று தெரிவித்தனர்.

* ககன்யான் வீரர்களுக்கு பாராட்டு

இஸ்ரோவின் முதல் மனித விண்வௌி பயண திட்டத்தில் விண்வௌி சென்ற குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா மற்றும் பயண குழுவில் இடம்பெற்றிருந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோர் நேற்று கவுரவிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு விண்வௌி வீரர்களை பாராட்டி, கவுரவித்தார்.

Advertisement