தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம்

சென்னை: சென்னை அருகே நண்பனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வெயிலில் சென்ற 17 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பட்டாபிராம், பி.டி.எம்.எஸ்., பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (17). இவரது நண்பர் ஆவடி அடுத்த திருநின்றவூர், கோமதிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (17). இருவரும் பிளஸ் 2 படித்துள்ளனர். இவர்களில் ஹரிஹரசுதன் இதய நோய் பாதிப்பு உள்ளவர் என கூறப்படுகிறது. மேலும் சக்தியும் இணை வழி நோயால் பாதிக்கப்பட்டவர். எனவே, வெயில் அதிகம் தாக்கும் நேரத்தில் வெளியே சென்றால் மயங்கி விழுவது வழக்கம். இந்நிலையில், ஹரிஹரசுதன் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement

அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அதிகாலை உயிரிழந்தார். எனவே, தனது நண்பனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சக்தி அன்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் சென்றுள்ளார். நண்பனின் சடங்கில் கலந்துகொண்ட நிலையில் திடீரென சக்தி மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை, மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், வியர்வை சுரக்கும் சுரபிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை வழி பாதிப்புகள் இருந்ததாலும் சக்தி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement