தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி; 2வது நாளாக பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

Advertisement

 

திருவண்ணாமலை: ஆனி மாத பவுர்ணமியொட்டி இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர். கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.08 மணி வரை என அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்ணாமலையார் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதைத்தொடர்ந்து விடிய விடிய இன்று காலையும் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

இன்று காலை சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 4 மணி நேரமானது.

பவுர்ணமியொட்டி பக்தர்களின் வசதிக்காக 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், திருவண்ணாமலை-தாம்பரம் இடையே விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் வழியாக பவுர்ணமி சிறப்பு ரயில், வேலூர், காட்பாடி வழியாக திருவண்ணாமலை-சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு பஸ், ரயில்களில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். இன்று அதிகாலையுடன் பவுர்ணமி நிறைவு பெற்றதால் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

 

 

Advertisement

Related News