தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நட்பின் காரணமாகவே பங்கேற்றேன் மூப்பனார் நினைவிடத்திற்கு வந்ததில் அரசியல் இல்லை: எல்.கே.சுதீஷ் பேட்டி

சென்னை: ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேமுதிக சார்பில் அவர் சென்றிருந்ததால் பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி: ஜி.கே.மூப்பனார் 24வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம். விஜயகாந்துக்கும். ஜி.கே.மூப்பனாருக்கும் இடையே 40 ஆண்டுகால நட்பு உண்டு. விஜயகாந்த் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். தே.ஜே. கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளீர்களே என்று கேட்கிறீர்கள். நாங்கள் இங்கு வந்தது ஜி.கே.வாசன், ஜி.கே.மூப்பனார் குடும்பத்தினருக்காகவே. இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News