தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் டேங்கர் மூடி திறந்து கிடந்ததால் பரபரப்பு

Advertisement

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து மைசூருக்கு எரிபொருள் ஏற்றிக்கொண்டு 25 டேங்கர்களுடன் சரக்கு ரயில் நேற்று மாலை புறப்பட்டு சென்றது. அப்போது, சரக்கு ரயிலின் ஒரு டேங்கரில் இருந்து அதிக சத்தம் வருவதாக சரக்கு ரயில் கார்டு ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகள் எரிபொருள் நிரப்பிய சரக்கு ரயிலை பாதுகாப்பாக நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆவடி ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் சரக்கு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. அங்கு நின்றிருந்த பயணிகள் அனைவரும் 3வது நடைமேடைக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டனர். அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களும் 3வது நடைமேடை வழியாக இயக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் டேங்கர் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, சரக்கு ரயிலின் 9வது டேங்கர் மேல்மூடி திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் டேங்கின் மேல்மூடியை பாதுகாப்பாக மூடினர். இதனால் டேங்கர் ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டது. அனைத்து டேங்கின் மூடிகளும் சரியாக உள்ளதை உறுதி செய்த பிறகு சரக்கு ரயில் புறப்பட்டது.

கடந்த வாரம் திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் எரிபொருள் நிரப்பிய சரக்கு ரயிலின் டேங்கர் மூடி திறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்டு உரிய நேரத்தில் கண்டறிந்து தகவல் தெரிவித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement