சரக்கு ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர், திருவள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை..!!
Advertisement
இத்தகைய ரயில் விபத்து காரணமாக 900 டன் அளவிற்கு கச்சா எண்ணெய் எரிபொருள் எறிந்துள்ளது. கச்சா எரிபொருள் எரிந்ததற்கான காரணம் என்ன. வேகனிலிருந்த பாதுகாப்பு அம்சங்கள் என்ன. எவ்வாறு விபத்து ஏற்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கையோடு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இத்தகைய ரயில் விபத்தால் சுமார் 36 மணி நேரமாக சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்து தற்போது 4 ரயில் தடங்களிலும் ரயில் செயல்பட தொடங்கி உள்ள நிலையில் ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை குழு தற்போது 16 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளது.
Advertisement