தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பின் தலைவர் நா.விஜயராகவன் தமிழக முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனு: தமிழக அரசு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் தியாகிகளின் மகன்கள், மகள்கள் இதனை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. சுதந்திர போராட்ட காலம் நிகழ்ந்து 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் தியாகிகளுக்கு தற்போது 90 வயதில் இருந்து 100 வயதை கடந்திருக்கும்.
Advertisement

அவர்களது மகன், மகள்களுக்கு சுமார் 50 வயது முதல் 60 வயது வரை இருக்கும். ஆகவே, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அளிக்கப்படும் முன்னுரிமையை சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு அளிக்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வரும் உதவித்தொகையோடு மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு சார்பில் நியமிக்கப்படும் அரசு துறை வாரியங்கள் மற்றும் ஆணையம் பொறுப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவப்படியை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி தர வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில் தனியாக 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement