தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில் பாஸ்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த அ.பார்வதி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது கணவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு சுதந்திர போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் கிடைத்தது. அவரது மறைவுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் வாங்கி வருகிறேன். சுதந்திர போராட்ட தியாகியை சார்ந்திருக்கும் மனைவி அல்லது வாரிசுகளில் ஒருவருக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்பட வேண்டும்.

Advertisement

இதையடுத்து, எனக்கு இலவச ரயில் பாஸ் வழங்க கோரி கடந்த ஜனவரி 13ம் தேதி ஒன்றிய உள் விவகாரத்துறைக்கு மனு அனுப்பினேன். ஆனால், எனது மனு பரிசீலிக்கப்படவில்லை. எந்த பதிலும் வரவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து எனக்கு இலவச ரயில் பாஸ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜராகி, மனுதாரர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை பரிசீலித்து இலவச ரயில் பாஸ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை 2 வாரங்களில் பரிசீலித்து அவருக்கு இலவச ரயில் பாஸ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement

Related News