தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச வீடுகள் கட்டி தருவதாக ரூ.92 லட்சம் மோசடி 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏ.திருஞானசம்பந்த மூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் சவுத் இண்டியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடு இல்லாத சுமார் 2 ஆயிரம் பேருக்கு வீடுகளை கட்டி தருவதாகவும் தன்னுடன் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்காக சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்டரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் விக்டோரியாவிடம் அழைத்து சென்றார்.
Advertisement

இதை நம்பி ரூ.60 லட்சத்தை அவர் கூறிய கட்டிட நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக எங்களது டிரஸ்ட் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தேன். ஆனால், ராஜசேகர் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டார். கட்டிட பணிகளை மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டினர். திருவண்ணாமலை டிஎஸ்பியிடம் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவண்ணாமலை நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. மொத்தம் என்னிடமிருந்து ரூ.92 லட்சத்து 36,635 மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு பலமுறை மனு அனுப்பியும் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, ராஜசேகர் மற்றும் விக்டோரியா ஆகியோரின் வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கம் செய்து எனது பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வி.நந்தகோபாலன், ஜெ.ஜனார்தனன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Related News