தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் என கூறி பள்ளி ஆசிரியை தாயிடம் ரூ.48 ஆயிரம் நூதன மோசடி

சென்னை: சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் பபிதா கிரேசியா. அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது தாய் எஸ்தர் ராணியை செல்போனில் தொடர்புகொண்ட வினோத்குமார் என்பவர், பிரதமர் மோடியின் கல்வி திட்ட அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.1.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் சேர வேண்டும் என்றால், நான் அனுப்பும் ரெக்யூஸ்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement

அதை உண்மை என்று நம்பிய எஸ்தர் ராணி, வினோத்குமார் அனுப்பிய ரெக்யூஸ்டில் தனது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 5 தவணையாக ரூ.48,716 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகு தான் இது மோசடி என தெரியவந்தது. எனவே பிரதமர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement