தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3,700 கோடி மோசடி மன்னன் சிறையில் இருந்தபடியே நீதிபதிக்கு மிரட்டல்: போலீஸ்காரரின் போனை பயன்படுத்தியது அம்பலம்

 

Advertisement

லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிறையில் உள்ள கைதி, போலீஸ் கான்ஸ்டபிள் செல்போனைப் பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘பான்சி’ திட்டத்தின் மூலம், சுமார் 3,700 கோடி ரூபாய் சைபர் மோசடி செய்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட அனுபவ் மிட்டல் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர், தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த அஜய் குமார் என்ற போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனை அனுபவ் மிட்டல் பயன்படுத்தியுள்ளார். அந்த செல்போனிலேயே புதிய மின்னஞ்சல் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நீதிபதி ஒருவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் அடுத்த நாள் காலை நீதிபதிக்குச் செல்லும் வகையில் திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளது. தன்னுடன் சிறையில் உள்ள சக கைதி ஒருவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரில் இந்த மிரட்டலை மிட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் மின்னஞ்சல் போலீஸ் கான்ஸ்டபிளின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அனுபவ் மிட்டல் மற்றும் கடமையில் அலட்சியமாக இருந்த காவலர் அஜய் குமார் ஆகியோர் மீது குற்றவியல் மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவலர் அஜய் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Advertisement

Related News