தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.42.30 லட்சம் மோசடி: அதிகாரி அதிரடி கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவரது மனைவி ரேவதி மற்றும் 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சேலம் மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(42), ஓமலூர் செந்தில்நாதன்(40) ஆகியோர் கூறியுள்ளனர். இதை நம்பி 4 பேரும் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் தொகையை பல்வேறு தவணைகளில் கடந்த ஜனவரி மாதம் அனுப்பியுள்ளார்.

Advertisement

அதன் பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் இசிஜி டெக்னீசியன், கலால் அலுவலக ஊழியர், ரேஷன் கடை ஊழியர், வேலை வாய்ப்பு அலுவலக உதவியாளர் என பணி நியமன ஆணைகளை இ-மெயிலில் அனுப்பியுள்ளனர். ஆனால், அது போலி என தெரிய வந்தது.

இதுகுறித்து சீனிவாசன் புகாரின்படி பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தியதில், சந்தோஷ்குமார் சேலம் போலீசாரால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த செந்தில்நாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement